பிஜீங்:
ஹுகயான் மாகாணத்தில் உள்ள குயிங்பாஜியாங் பகுதியில் 5.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. 10 வினாடிகளுக்கு அதிகமாக நில அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கத்தை தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
பயணம் செய்தவர்கள் உடனடியாக வாகனத்தை விட்டு இறங்கினார்கள். இதுவரை உயிர்சேதம், பொருட்சேதம் விவரம் தெரியவில்லை. மீட்பு படையினர் 150 பேர் 34 வாகனங்களில் அந்த பகுதிக்கு விரைந்துள்ளனர்.