வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தி வருவது அதிகரித்துள்ளது. எனவே, அனைத்து விமான நிலையங்கள், ரெயில் நிலையங்களிலும் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சந்தேகப்படும்படியான நபர்களின் பொருட்கள் சோதனையிடப்படுகின்றன.
அவ்வகையில், புதுடெல்லி ரெயில் நிலையத்திற்கு வந்த 8 பயணிகளின் உடமைகளை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில், அவர்களின் லக்கேஜில் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட 504 தங்க கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், 8 பேரையும் கைது செய்தனர்.
இந்த தங்க கடத்தலில் தொடர்புடைய முக்கிய புள்ளி குறித்து விசாரணை நடைபெறுகிறது.