சென்னையில் மாநகர பேருந்துகளை ஓட்டும் சில டிரைவர்கள் பரபரப்பான சாலை போக்குவரத்துக்கு இடையில் பேருந்தை இயக்கியபடி செல்போனில் பேசிக் கொண்டு செல்வதுண்டு.
இதனால், சாலையில் இருக்க வேண்டிய கவனம் சிதறி விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பயணிகள் அச்சப்படுகின்றனர்.
தொடர்ந்து, இதே தவறை செய்யும் டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. #MTCdrivers #MTCdriverssuspended