செய்திகள்

காங்கோ நாட்டில் இன்று நேர்ந்த சோகம் - பெட்ரோல் டாங்கர் விபத்தில் 50 பேர் உடல் கருகி பலி

ஆப்பிரிக்க கண்டத்தின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள காங்கோ நாட்டின் இன்று பெட்ரோல் டாங்கர் லாரி வேறொரு வாகனத்தில் மோதிய விபத்தில் 50 பேர் உடல் கருகி பலியாகினர். #50killed #oiltankercrash #DRCongo

கின்ஷாசா:

ஆப்பிரிக்க கண்டத்தின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் உள்ள மத்திய காங்கோ மாகாணத்தில் இன்று பெட்ரோல் டாங்கர் லாரி வேறொரு வாகனத்தில் மோதிய விபத்தில் 50 பேர் உடல் கருகி பலியாகினர்.

சுமார் 100 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பாதால் இவ்விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #50killed #oiltankercrash #DRCongo

SCROLL FOR NEXT