கோப்பு படம் 
செய்திகள்

ரஷியாவில் அணு ஏவுகணை பரிசோதனையின்போது விபத்து - 5 பேர் உயிரிழப்பு

ரஷியா நாட்டுக்கு உட்பட்ட ஆர்க்டிக் பெருங்கடலை ஒட்டியுள்ள பகுதியில் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அதிநவீன ஏவுகணையை பரிசோதித்தபோது ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

மாலை மலர்

அணு ஆயுத பலத்தில் உலகின் முன்னணி நாடுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ரஷியா, அவ்வப்போது
வான்வழியாகவும், நீர்மூழ்கி கப்பல்களில் இருந்தும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அதிநவீன ஏவுகணைகளை பரிசோதித்து வருகிறது.

அவ்வகையில், அந்நாட்டின் வடமேற்கில் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியை ஒட்டியுள்ள வெள்ளை கடலின் அருகாமையில் நியோனோக்ஸா பரிசோதனை மையத்தில் நேற்று முன்தினம்  (வியாழக்கிழமை) அதிநவீன ஏவுகணையை ரஷியா பரிசோதிக்க முயற்சித்தது.