செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 4 லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #JKEncounter

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த மாதம் பிப்ரவரி 14ம் தேதி காஷ்மீரின்  நடத்தப்பட்ட தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். இதையடுத்து ஜம்மு காஷ்மீரின் எல்லைப்பகுதிகளிலும், பொது இடங்களிலும் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள லாசிபூரா பகுதியில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பாதுகாப்புப்படையினர் அப்பகுதிக்கு விரைந்து பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தனர்.