கோப்பு படம் 
செய்திகள்

நைஜீரியா: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 35 பேர் பலி

நைஜீரியா நாட்டில் ராணுவத்தினரை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர்.

மாலை மலர்

வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் நைஜீரியாவும் ஒன்று. இந்நாட்டை சுற்றி லிபியா, சூடான் மற்றும் சாட் ஆகிய நாடுகள் அமைந்துள்ளது.  

இங்கு போகோ ஹாரம், ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நைஜீரியாவின் மைதுடுருகி மாகாணத்தில் உள்ள மைதுடுருகி-டம்போ தேசிய நெடுச்சாலையில் இன்று அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ராணுவ வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த போகோ ஹாரம் பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.