ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் நாடுகளில் உள்ள வனப்பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி முப்பதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.
போர்ச்சுகல் நாட்டில் ஸ்பெயின் எல்லையையொட்டியுள்ள வனப்பகுதிகளில் நேற்றிலிருந்து சுமார் 520 இடங்களில் காடுகள் தீப்பற்றி எரிந்து வருகின்றன. இந்த தீயை அணைக்கும் பணியில் சுமார் 4500 வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், போர்ச்சுகல் நாட்டில் காட்டுத்தீயில் சிக்கி 27 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் பிரதமர் அன்ட்டோனியோ கோஸ்ட்டா தெரிவித்துள்ளார்.