செய்திகள்

காவேரிபட்டணம் அருகே நண்பரை கத்தியால் குத்திய 3 பேர் கைது

காவேரிபட்டணம் அருகே தகராறில் நண்பரை கத்தியால் குத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டணம், அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவாஜி மகன் முகேஷ்(20). கூலித்தொழிலாளியான இவருக்கும், இவரது நண்பர்கள் ஜமேதார்மேடு கதிரேசன் மகன் பாரத்(19), சின்னத்தம்பி மகன் அருண்குமார்(23), கருக்கன்சாவடி பர்கத் மகன் அஸ்கர்(20) இவரர்களுக்குள் திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டுளளது. 

இதில் தகராறு முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த 3பேரும் முகேஷ்யை பலமாக தாக்கி, கத்தியால் குத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த முகேஷ் காவேரிபட்டணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து தகவலறிந்து வந்த காவேரிபட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாரத், அருண்குமார், அஸ்கர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.