செய்திகள்

அமெரிக்காவில் பனிப்புயலுக்கு 3 பேர் பலி- 500 விமானங்கள் ரத்து

அமெரிக்காவில் பனிப்புயல் வீசியதால் 500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் கடும் பனிப்புயலுக்கு 3 பேர் பலியாகினர். #Snowstorm #USWeather #FlightsCancelled

மாலை மலர்

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் வீசுகிறது. இதனால் ரோடுகள் மற்றும் வீடுகள் மீது பனி கொட்டுகிறது. டகோடா, மின்னெசோட்டா, கன்சாஸ் மற்றும் அயோவா மாகாணங்களில் பனி கொட்டிக் கிடப்பதால் ரோடுகள் மூடப்பட்டுள்ளன.

விமான நிலையங்களில் 8 முதல் 18 அங்குலம் அளவுக்கு பனி உறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 5700 விமானங்கள் தாமதமாக வந்து சென்றன.