ஈரானில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்காக சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 97 பேர் நேற்று உயிரிழந்ததால் இந்நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 729 ஆக உயர்ந்துள்ளதாகவும் ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், ஈரான் நாட்டில் உள்ள இஸ்லாமிய புனிதத் தலங்களை தரிசிக்கவும் அந்நாட்டில் உள்ள பிரபல பல்கலைக்கழகங்களில் பயிலவும் சென்ற சுமார் 6 ஆயிரம் இந்தியர்கள் கொரோனா பீதிக்கு இடையில் அங்கு சிக்கித் தவித்தனர்.