ஈரோடு:
நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த மாணவி அனிதா தற்கொலை கொண்டார். இதைத் தொடர்ந்து மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டம் வலுத்துள்ளது.
ஈரோட்டில் காளை மாட்டு சிலை அருகே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பிரதமர் மோடி உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.
மாணவரணி கபிலன் தலைமையில் மாவட்ட செயலாளர் குமரகுருபரன் முன்னிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சுமார் 25 பேர் மோடி உருவ பொம்மையுடன் வந்தனர்.
அப்போது அவர்கள் நீட் தேர்வுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். அவர்களை சூரம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி மோடி உருவ பொம்மையை பறித்தனர்.
பின்னர் பிரதமர் உருவ பொம்மையை எரிக்க முயன்றதாக 5 பெண்கள் உள்பட 23 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.