செய்திகள்

தெற்கு சூடான் விமான விபத்தில் 21 பேர் பலி

தெற்கு சூடான் நாட்டின் தலைநகரான ஜுபாவில் இருந்து இன்று புறப்பட்டு சென்ற விமானம் ஆற்றுக்குள் விழுந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். #SouthSudan

ஜுபா:

தெற்கு சூடான் நாட்டின் தலைநகரான ஜுபாவில் இருந்து 24 பயணிகளுடன் தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று இன்று ஈரோல் நகரை நோக்கி புறப்பட்டு சென்றது.

செல்லும் வழியில் கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஈரோல் நகரின் அருகே ஆற்றுக்குள் விழுந்தது. இந்த விபத்தில் உயிரிழந்த 21 பேரின் பிரேதங்கள் மீட்கப்பட்டுள்ளன. 6 வயது குழந்தை உள்பட மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #SouthSudan #SouthSudanplanecrash

SCROLL FOR NEXT