இந்த ஆண்டு மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி மாலையில் அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் சுவாமி அய்யப்பனை வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு யாத்திரைக்கு சபரிமலை சென்ற 19 பக்தர்கள் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளனர் என திருவாங்கூர் தேவஸ்தான வாரியத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.