செய்திகள்

மேலும் ஒரு டிக் டாக் விபரீதம் - துப்பாக்கி வெடித்து 17 வயது சிறுவன் பலி

மகாராஷ்டிரா மாநிலத்தில் டிக் டாக் செயலிக்காக நாட்டு துப்பாக்கியுடன் ‘போஸ்’ கொடுத்த 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

டிக் டாக் மோகத்தால் விசித்திரமான சாகசங்களை நிகழ்த்த முயன்று சிலர் தற்செயலாக உயிரைவிட நேரும் சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அவ்வகையில், மகாராஷ்டிரா மாநிலம், ஷிர்டி மாவட்டத்தில் பிரட்டீக் வடேகர் என்ற  17 வயது சிறுவன் நாட்டு துப்பாக்கியுடன் டிக் டாக் செயலிக்காக நேற்று ‘போஸ்’ கொடுக்க முயன்றுள்ளான்.