செய்திகள்

அமர்நாத் யாத்திரை: 33 நாட்களில் 2.55 லட்சம் பேர் தரிசனம்

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புனித ஸ்தலமான அமர்நாத் பனி லிங்கத்தை நேற்று மட்டும் 1571 யாத்ரீகர்கள் தரிசனம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புனித ஸ்தலமான அமர்நாத் பனி லிங்கத்தை நேற்று மட்டும் 1571 யாத்ரீகர்கள் தரிசனம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். இந்த ஆண்டு தரிசனத்தையொட்டி யாத்ரீகர்களின் முதல் குழுவினர் கடந்த மாதம் 28-ம் தேதி பயணத்தை தொடங்கினர். முதல் நாளாக 2,280 யாத்ரீகர்கள் மலையடிவாரத்தில் இருந்து அமர்நாத் ஆலயத்துக்கு புறப்பட்டு சென்றனர்.