உத்தர பிரதேசத்தில் தொடரும் கனமழை- கட்டிடங்கள் இடிந்ததில் 3 நாளில் 15 பேர் பலி
உத்தர பிரதேசத்தில் கனமழை நீடித்து வரும் நிலையில், கடந்த நான்கு தினங்களில் மட்டும் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாலை மலர்
உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பருவ மழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக பிரயாக்ராஜ், உன்னாவ், கோரக்பூர், பிலிபிட் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.