செய்திகள்

ஈரோட்டில் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

நாளை தேர்வு எழுத உள்ள நிலையில் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

சென்னிமலை:

ஈரோடு மாவட்டம், சென்னிமலை 1010 நெசவாளர் குடியிருப்பில் வருபவர் சக்திவேல். இவர் அரசு பஸ் கண்டக்டராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி சுந்தரி. இவர்களுக்கு ராம் பிரசாத்(15),என்ற பத்தாம் வகுப்பு படிக்கும் மகனும், கலையரசன்(13)என்ற 7-ம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர்.

ராம் பிரசாத் வீட்டருகே உள்ள முகாசிபிடாரியூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தவர் படிக்க வேண்டும் என கூறி வீட்டிற்குள் சென்று தாழிட்டுக்கொண்டார்.

இரண்டுமணி நேரம் ஆகியும் கதவு திறக்காத்தால் வீட்டில் உள்ளவர் ஜன்னல் வழியாக பார்த்தபோது ராம் பிரசாத் தூக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது.

இதனையடுத்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாளை பத்தாம் வகுப்பு பரீட்சை துவங்கும் நிலையில் மாணவர் ராம்பிரசாத் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மாணவர் ராம்பிரசாத் தேர்வு பயத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு என்ன காரணம்? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  #tamilnews