விருத்தாசலம்:
திட்டக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி. 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் அங்குள்ள விவசாய நிலத்தில் இருந்து தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாள். அப்போது மோசட்டை கிராமத்தை சேர்ந்த புருஷோத்தமன் (வயது 29) என்பவர், சிறுமியின் வாயில் துணியை வைத்து, அருகில் உள்ள கரும்பு தோட்டத்திற்குள் தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
இது குறித்து அந்த சிறுமி பெற்றோரிடம் கூறினார். பின்னர் இதுகுறித்து சிறுமி, விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து புருஷோத்தமனை கைது செய்தனர்.