சுப்ரீம் கோர்ட் 
செய்திகள்

ராஜினாமா ஏற்க மறுப்பு- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

கர்நாடகாவில் ராஜினாமா செய்த ஆளுங்கட்சி எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகர் மறுத்துவிட்டதால் உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மாலை மலர்

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி கட்சிகளை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். அவர்களில் 10 பேர், மும்பையில் உள்ள ஓட்டலில் தங்கியுள்ளனர். அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் கட்சி தலைமை தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. சமாதானம் செய்வதற்காக இன்று மும்பை சென்ற மந்திரி டி.கே.சிவக்குமாரை ஓட்டலுக்குள் விட போலீசார் மறுத்துவிட்டனர்.

இதற்கிடையே ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் இதுவரை ஏற்கவில்லை. நேரில் வந்து கொடுத்தால் பரிசீலிப்பதாக கூறியுள்ளார். ஆனால், பதவி விலகுவதில் எம்எல்ஏக்கள் உறுதியாக உள்ளனர். இதற்காக, மும்பையில் தங்கியிருக்கும் 10 எம்எல்ஏக்களும் இன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.