கோப்புப்படம் 
செய்திகள்

பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில் கடந்த 6 மாதங்களில் 10 ராணுவ வீரர்கள் பலி

பாகிஸ்தான் படையின் அத்துமீறிய தாக்குதலில் கடந்த 6 மாதங்களில் 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்து உள்ளனர்.

மாலை மலர்

பாராளுமன்ற மேலவையில் பாதுகாப்பு துறைக்கான இணை மந்திரி ஸ்ரீபத் நாயக் எழுத்துப்பூர்வ முறையில் அளித்துள்ள பதிலில், எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லை பகுதியில் பாகிஸ்தான் படையினரால் நடத்தப்பட்ட எல்லை மீறிய துப்பாக்கி சூடு தாக்குதலில் கடந்த 6 மாதங்களில் 10 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளார்.

ஜம்முவில் உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான சர்வதேச எல்லை பகுதியில் இந்த ஆண்டில் (மார்ச் 1 முதல் ஆகஸ்டு 7 வரை) 192 எல்லை மீறிய துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்தேறியுள்ளன என அவர் தெரிவித்து உள்ளார்.