கோப்புபடம் 
செய்திகள்

புதுக்குடியில் ஊரடங்கை மீறி பிரசாரத்தில் ஈடுபட்ட 10 பேர் கைது

புதுக்குடியில் ஊரடங்கை மீறி பிரசாரத்தில் ஈடுபட்ட 10 பேரை செங்கிப்பட்டி போலீசார் கைது செய்தனர்.

திருக்காட்டுப்பள்ளி:

தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பு, வணிகம் ஆகியவற்றில் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பூதலூர் அருகே உள்ள புதுக்குடி பிரதான சாலையில் தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் பிரசாரம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரியக்க செயலாளர் தென்னவன் தலைமை தாங்கினார். 

இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த பிரசாரம் ஊரடங்கை மீறி நடைபெற்றதாக கூறி அதில் கலந்து கொண்ட 10 பேரை செங்கிப்பட்டி போலீசார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT