பர்மிங்காம்:
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.
109 கிலோ எடைப்பிரிவினருக்கான பளு தூக்குதல் போட்டியில் இந்திய வீரர் குர்தீப் சிங், மொத்தம் 390 கிலோ எடையை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.
காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களை கைப்பற்றி உள்ளது.