கோடை காலங்களில் பெண்கள் ஜீன்ஸ், லெக்கின்ஸ் போன்ற ஆடைகள் உடுத்துவதை தவிர்க்க வேண்டும். அடர்த்தியான துணிகளை கொண்ட ஜீன்ஸ் உடலில் வெளிப்படும் வியர்வையை உறிஞ்சாது. அது உடலிலேயே தங்கி சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
மேலும் லெக்கின்ஸ் போன்ற ஆடைகளை தவிர்த்து தளர்வான ஆடைகளை அணிவதே உடலுக்கு சவுகரியமாக இருக்கும். அதிலும் காட்டன் துணிகளை உடுத்துவதே நல்லது. உடல் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஈரப்பதமான ஆடைகளை உடுத்தக் கூடாது. அவை நோய் தொற்று ஏற்படுவதற்கு மூலகாரணமாகிவிடும்.