கோதுமை கேழ்வரகு ஆலு பரோட்டா 
ஆரோக்கியம்

கோதுமை கேழ்வரகு ஆலு பரோட்டா

சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்களுக்கு கோதுமை கேழ்வரகு ஆலு பரோட்டா உகந்தது. இன்று பரோட்டாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மாலை மலர்

கோதுமை மாவு - அரை கப்
ராகி மாவு -  அரை கப்
உப்பு - தேவையான அளவு
 
ஸ்டஃப்பிங்க்கு...

உருளைக்கிழங்கு - 1
கரம் மசாலாத்தூள் - அரை ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு

ஒமம் - கால் ஸ்பூன்

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கோதுமை மாவு ராகி மாவு இரண்டையும் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரைமணி நேரத்திற்கு மூடி ஊற விடவும்.

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.

மசித்த உருளைக்கிழங்குடன் உப்பு, கரம்மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை, ஒமம் சேர்த்து கிளறவும்.

மாவை சமஅளவு உருண்டைகளாக பிரித்து உருட்டி, பூரி அளவிற்கு திரட்டி உருளைக் கலவையை வைத்து நன்றாக மூடி கையால் தட்டி மெதுவாக திரட்டவும்.

தோசைக் கல்லை அடுப்பில் வைத்து பரோட்டாவை சிறிதளவு எண்ணெய் விட்டு 2 பக்கமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

சுவையான கோதுமை கேழ்வரகு ஆலு பரோட்டா ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.