பாதாமை அப்படியே சாப்பிடுவதால் அதன் முழுமையான பலன்களை பெறலாம். ஆனால் பாதாம் பாலாக செய்து குடிக்கும் போது அதன் சத்துக்கள் முழுமையாக கிடைக்காமல், நீர்த்துவிடுகிறது.
சிலர் ஒரு வயதிற்கு முதலேயே பாதாம் பாலை குழந்தைகளுக்கு தருவார்கள். அது தவறு. ஏனெனில் சில குழந்தைகளுக்கு நட்ஸ் அலர்ஜி உண்டாகலாம்.
நட்ஸ் அலர்ஜி உண்டானால் வாந்தி, வயிற்று வலி, மூச்சு திணறல், வயிறு இழுத்து பிடிப்பதுபோலுணர்வு, இருமல், சரும தடிப்பு ஆகியவை உண்டாகலாம். இதனால் மருத்துவரை ஒருமுறை கலந்தாலோசித்துவிட்டு நீங்கள் கொடுக்கலாம்.
பாதாம் பாலில் கொழுப்பு குறைவாக இருக்கும். அதோடு பாதாமிலுள்ள சில பண்புகள் கொழுப்பை கரைக்கும் ஆற்றல் கொண்டவை. ஆகவே குழந்தைகளுக்கு கொழுப்பை வரவிடாமால் தடுக்கும். ஆனால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு கொழுப்பும் அவசியமாகும்.
பொதுவாக 2 வயதிற்கு பிறகு குழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுக்கலாம். இது மூளை வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான நட்ஸ் ஆகும். அதிலுள்ள நார்சத்து இதயத்தை வலுவாக்கும். எலும்புகள் வலுவாகும்.