பச்சரிசி - ஒரு கப்,
துருவிய இஞ்சி, மாங்காய் - சிறிதளவு,
ஊற வைத்த கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய், கொத்தமல்லி விழுது - சிறிதளவு,
நெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
பச்சரிசியை வெறும் கடாயில் போட்டு வறுத்து ரவை போல் உடைத்து கொள்ளவும்.
இரண்டு கப் தண்ணீரை கொதிக்கவிட்டு, ஒரு டீஸ்பூன் நெய், ஊற வைத்த கடலைப்பருப்பு, உப்பு, துருவிய இஞ்சி, மாங்காய், பச்சை மிளகாய் - கொத்தமல்லி விழுது, பச்சரிசி ரவை சேர்த்துக் கைவிடாமல் கிளறி தண்ணீர் வற்றியதும் இறக்கவும்.
பின்னர் இந்த மாவை உருண்டைகளாகப் பிடித்து, 10 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
இதை சட்னி அல்லது சாஸுடன் பரிமாறவும்.