ஆரோக்கியம்

சூப்பரான ஸ்நாக்ஸ் சேமியா பக்கோடா

டீ, காபியுடன் மொறுமொறுப்பான நொறுக்குத்தீனி சாப்பிடுவதற்கு பலரும் ஆசைப்படுவார்கள். இன்று மொறுமொறு சேமியா பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மாலை மலர்

வறுத்த சேமியா - 200 கிராம்
வெங்காயம் - கால் கப்
கடலை மாவு - 5 டீஸ்பூன்
இஞ்சி - சிறிதளவு
அரிசி மாவு - கால் கப்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி தழை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

வெங்காயம், இஞ்சி, ப.மிளகாபை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, சேமியா, வெங்காயம், மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி ஆகியவற்றுடன் தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து கெட்டியான மாவு பதத்துக்கு (பக்கோடா மாவு பதம்) கொண்டுவர வேண்டும்.

வாணலியில் எண்ணெய் விட்டு அது சூடானதும் மாவை பக்கோடாவை போல உதிர்த்து போட்டு பொரித்து எடுக்கவும்.

மொறுமொறுப்பான சேமியா பக்கோடா ரெடி.