தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
அவலை சுத்தம் செய்து தண்ணீரில் ஊறவைக்கவும். ஊறியதும் பிழிந்தெடுத்துக் கொள்ளவும்.
கடாயில் நல்லெண்ணெயை விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் அவல், உப்பு சேர்த்து, ஒரு கையளவு தண்ணீர் தெளித்து நன்றாக கிளறி, சிறு தீயில் வைத்து மூடி வைத்து வேக விடவும். 5 நிமிடத்தில் வெந்து விடும்.
தேங்காய்த்துருவல் தூவி பரிமாறவும்.
சூப்பரான சிவப்பு அவல் உப்புமா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.