ரவை - 250 கிராம்
சர்க்கரை - 1 கப்
தேங்காய் - அரை மூடி ,
உப்பு - ஒரு சிட்டிகை
நெய் - 1 ஸ்பூன்
செய்முறை :
தேங்காயை துருவிக்கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் ரவையை போட்டு உதிர் உதிராக வாசனை வரும்வரை வறுக்கவும்.
வறுத்த ரவை ஆறியதும் தண்ணீரில் உப்பு சேர்த்து தெளித்து பிசிறிக் கொள்ளவும்.
இத்துடன் சர்க்கரை, துருவிய தேங்காய், நெய் கலந்து, வைத்து கொள்ளவும்.
பிசறி வைத்த மாவை புட்டு வேக வைக்கும் குழாயில் போட்டு 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் சுவையான ரவா புட்டு ரெடி.