ஆரோக்கியம்

சுவையான சத்தான கேழ்வரகு கேரட் தோசை

அதிக சத்துக்கள் நிறைந்த கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று கேழ்வரகு கேரட் சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மாலை மலர்

கேழ்வரகு மாவு - 1 கப்,
தோசை மாவு - 2 கரண்டி,
தண்ணீர், உப்பு - தேவையான அளவு,
சீரகம் - சிறிதளவு,
பச்சைமிளகாய் - 2
வெங்காயம் - 1
கேரட் - 1
கொத்தமல்லி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

* வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கேரட்டை துருவிக்கொள்ளவும்.

* ராகி மாவில் தோசை மாவு, தேவையான அளவு உப்பு, தாளித்த சீரகம், துருவிய கேரட், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாயைச் சேர்த்து தோசை மாவுப் பதத்துக்குக் கலக்க வேண்டும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை 1 கரண்டி ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

* சுவையான சத்தான கேழ்வரகு கேரட் தோசை ரெடி.