இளம் பிரண்டைத்துண்டுகள் - ஒரு கப்,
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,
உளுந்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,
புளி - நெல்லிக்காய் அளவு,
பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பிரண்டையை நன்றாக சுத்தம் செய்து ஓரங்களில் இருக்கும் நாரை எடுத்து விட்டு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய்விட்டு பெருங்காயத்தூள், உளுந்தம்பருப்பு போட்டு சிவக்க வறுத்த பின்னர் பிரண்டை சேர்த்து நன்றாக 10 முதல் 15 நிமிடங்கள் வரை வதக்கவும். (அப்போதுதான் பிரண்டையின் அரிப்புத் தன்மை போகும்).
வதக்கிய பொருட்கள் நன்றாக ஆறிய பின்னர் இதனுடன் புளி, உப்பு சேர்த்துத் தண்ணீர் தெளித்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும்.
வாணலியில் மீதமுள்ள நல்லெண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும்.
அதனுடன் அரைத்த விழுது, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி எண்ணெய் பிரிந்து வரும்போது வெல்லம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.