கதம்பம்

கடையெழு வள்ளல்கள்

நள்ளி - கண்டீர நாடு. தன்னை அண்டி வந்தவர்க்கு தான் யார் என்பதை வெளிப்படுத்தாமல் உதவி செய்தவர்.ஓரி - கொல்லிமலை. விற் போரில் வல்ல ஓரி கொல்லிமலைக் கவிஞர்களுக்கு தன் நாட்டையே பரிசளித்தவர்.

கடையேழு வள்ளல்கள் பற்றி கேள்விப்பட்டு இருப்போம். அவர்கள் எந்தெந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியுமா?

1) பேகன் - பழநி (வைகாவி நாடு) மயிலுக்கு போர்வை அளித்தவர்.

2) பாரி - திருப்புத்தூர் (பிரான்மலை எனும் பறம்பு மலை, சிவங்கை மாவட்டம்) முல்லைக் கொடி படர தேர் வழங்கியவர்.

3) காரி - திருக்கோவிலூர் (மலாடு - திருவண்ணாமலை) தன் குதிரையையும் ஏனைய செல்வங்களையும் வாரி வழங்கியவர்.

4) ஆய் - ஆய்குடி பொதிகைமலை. நாகர்கோவில் பகுதி, கன்னியாகுமரி மாவட்டம். நாகம் வழங்கிய அரிய ஆடையை சிவ பெருமானுக்கு அளித்தவர்.

5) அதியமான் - தர்மபுரி (தகடூர்) நீண்ட நாள் வாழக்கூடிய அரிய நெல்லிக்கனியை தான் உண்ணாமல் ஔவைக்கு கொடுத்தவர்.

6) நள்ளி - கண்டீர நாடு. தன்னை அண்டி வந்தவர்க்கு தான் யார் என்பதை வெளிப்படுத்தாமல் உதவி செய்தவர்.

7) ஓரி - கொல்லிமலை. விற் போரில் வல்ல ஓரி கொல்லிமலைக் கவிஞர்களுக்கு தன் நாட்டையே பரிசளித்தவர்.

இதில் வள்ளல் நள்ளி வாழ்ந்த கண்டீர நாடு என்பது மட்டும் தான் தெரியவில்லை. நளிமலை நாடன் நள்ளி என்னும் பெயரை பார்க்கும்பொழுது இவனும் மலை நாட்டை ஆண்டவன் என தெரிகிறது. தோட்டி மலை எனவும் இந்த மலை அறியப்படுகிறது.

- கார்த்திகேயன்