இன்றைய காலகட்டத்தில் பெண்கள் காஜல் மற்றும் ஐ-லைனர் போன்ற கண் மேக்கப்களை கலைக்க இயற்கை வழி என்று நினைத்து தேங்காய் எண்ணெயை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால், இந்த பழக்கம் கண்களின் ஆரோக்கியத்திற்கும், அழகுக்கும் பெரும் ஆபத்தாக முடியும். தேங்காய் எண்ணெய்க்குப் பதிலாகப் பயன்படுத்த வேண்டியவை.
தேங்காய் எண்ணெய் அதிக அடர்த்தி கொண்டது. இது கண்களைச் சுற்றியுள்ள மென்மையான சருமத் துளைகளை அடைத்து, 'மிலியா' எனப்படும் கொடூரமான வெள்ளை குருணைகளை முகத்தில் உருவாக்கிவிடும்.
இதற்குப் பதிலாக ஜோஜோபா ஆயில் பயன்படுத்த வேண்டும். இதன் மூலக்கூறுகள் நம் சருமத்தின் இயற்கையான செபம் போன்றே இருப்பதால், இது துளைகளை அடைக்காமல் வாட்டர்-ப்ரூஃப் மேக்கப்பைக் கூட மிக எளிதாகக் கரைத்து, சருமத்திற்குப் போதிய காற்றோட்டத்தைத் தரக்கூடியது.
தேங்காய் எண்ணெயைத் தொடர்ந்து கண்களைச் சுற்றித் தேய்க்கும்போது, அது கண்களின் கீழ் பகுதியில் நீர் தேக்கத்தை ஏற்படுத்தி கண் வீக்கத்தை அதிகமாக்கும். இதற்குப் பதிலாக ஸ்வீட் ஆல்மண்ட் ஆயில் பயன்படுத்தலாம்.
இது மிகவும் இலகுவான எண்ணெய் ஆகும். இது மேக்கப்பை சுத்தமாக நீக்குவதோடு மட்டுமன்றி, இதில் உள்ள வைட்டமின்-இ மற்றும் கே சத்துக்கள் கண்களுக்குக் கீழ் உள்ள கருவளையங்களை படிப்படியாகக் குறைக்க உதவும்.
மேக்கப் துடைக்கும் போது தேங்காய் எண்ணெய் தெரியாமல் கண்களுக்குள் சென்றால், தற்காலிகமாகப் பார்வை மங்கலாவதுடன் , கண்களில் கடுமையான எரிச்சலையும், ஒவ்வாமையையும் உண்டாக்கும்.
எண்ணெய் பசையுள்ள பொருட்கள் வேண்டாம் என்று நினைப்பவர்கள், அதற்குப் பதிலாக மைசெல்லர் வாட்டர் பயன்படுத்தலாம்.
காட்டன் பேடில் சில துளிகள் மைசெல்லர் வாட்டர் எடுத்து கண்களில் அழுத்தாமல் மென்மையாகத் துடைத்தாலே, கண்களுக்கு எந்தவித எரிச்சலும் இல்லாமல் மேக்கப் முழுமையாக நீங்கி, கண்கள் புத்துணர்ச்சி பெறும்.
சில சமயங்களில் கண் இமைகளின் வேர்ப்பகுதி பலவீனமடைந்து, கண் இமை முடிகள் கொட்டுவதுண்டு. இதற்குப் பதிலாக, ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் ஒரு ஸ்பூன் இயற்கையான அலோ வேரா ஜெல் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து பயன்படுத்தலாம்.
இந்த கலவை கண் மேக்கப்பை மிக மென்மையாக அகற்றுவதுடன், கண் இமை முடிகளுக்கு நல்ல ஊட்டச்சத்தைக் கொடுத்து, அவை அடர்த்தியாக வளரவும் வழிவகுக்கும்.
எண்ணெய் போன்றவற்றை முகத்தில் தடவிவிட்டு வெறும் தண்ணீரால் மட்டும் கழுவினால், எண்ணெய் பசையோடு சேர்ந்து மேக்கப்பின் மிச்சங்களும் முகத்திலேயே தங்கிவிடும். இதனால் பருக்கள் தோன்றும்.
இதற்குப் பதிலாக, கண்களுக்காகவே பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும் ஆயில்-ஃப்ரீ ஐ-மேக்கப் ரிமூவர் பயன்படுத்த வேண்டும். இதைக் கொண்டு மேக்கப்பைத் துடைத்த பிறகு, ஒரு மைல்டான ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தைக் கழுவும் டபுள் க்ளென்சிங் முறையைப் பின்பற்றினால், சருமம் 100% தூசியின்றி ஆரோக்கியமாக இருக்கும்.
கண்களில் அலர்ஜி, தொடர் அரிப்பு, சிவத்தல் அல்லது கண்பகுதியில் நீர் வடிதல் போன்ற பிரச்சனைகள் இருந்தால், எந்த ஒரு புதிய பொருளையும் பயன்படுத்தும் முன்பாக கண்டிப்பாக ஒரு கண் மருத்துவரை அல்லது சரும மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதே மிகவும் பாதுகாப்பானது.