முத்திரை 
ஆரோக்யம்

முத்திரை என்றால் என்ன?

முத்திரை என்றால் என்ன? முத்திரை செய்வதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

முத்திரை என்றால் என்ன? முத்திரை செய்வதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். மனித உடல் பஞ்சபூதத்தின் தொகுப்பு ஆகும். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாசம், இதுவே பஞ்சபூதமாகும். இதன் தன்மைகள் நமது ஒவ்வொரு செல்லிலும் உள்ளது. இதனுடைய கட்டுப்பாடு நம் கைவிரல் நுனியில் உள்ளது.

பெருவிரல் - நெருப்பு

சுண்டு விரல் - நீர்

மோதிர விரல் - நிலம்

நடுவிரல் - ஆகாயம்

ஆள்காட்டி விரல் -காற்று

முத்திரை என்பது கைவிரல் நுனிகளை இணைத்து செய்வதாகும். நாம் கை விரல்களை இணைக்கவில்லை. அதன் மூலம் பஞ்சபூதத்தை இணைக்கின்றோம். அதனால் அதைச் சார்ந்த உள் உறுப்புகள் நன்றாக இயங்கும்.