ஆரோக்கியம்

சத்தான காலை உணவு குதிரைவாலி வெந்தய கஞ்சி

சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது நல்லது. இன்று குதிரைவாலி அரிசியில் வெந்தய கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மாலை மலர்

குதிரைவாலி - 3/4 கப்
பச்சை பருப்பு - 1/4 கப்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
கேரட் துண்டுகள் - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறு துண்டு , பொடியாக நறுக்கவும் ( விரும்பினால் )
கொத்தமல்லி தழை - சிறிதளவு,
புதினா - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
பூண்டு - 4 பற்கள்
மஞ்சத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
பால் ( அ ) தேங்காய் பால் - 1/2 கப்



செய்முறை :

கேரட், கொத்தமல்லி, புதினா, இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குதிரைவாலி, பருப்பு மற்றும் வெந்தயத்தை நன்றாக கழுவி குக்கரில் போட்டு அதனுடன் 3 1/2 கப் தண்ணீர், கேரட், கொத்தமல்லி, புதினா, இஞ்சி, ப.மிளகாய், மஞ்சள் தூள், பூண்டு, உப்பு, கறிவேப்பிலை,  சேர்த்து 3 விசில் போட்டு மேலும் 5 நிமிடங்கள் குறைந்த தீயில் வேக விடவும்.

விசில் போனவுடன் கரண்டியால் நன்றாக மசித்து விடவும்.

கடைசியாக பால் சேர்த்து கலந்து பரிமாறவும்.

குதிரைவாலி வெந்தய கஞ்சி சூடாக சுவைத்தால் மிக மிக அருமையாக இருக்கும்.

சூப்பரான குதிரைவாலி வெந்தய கஞ்சி ரெடி.