குதிரைவாலி அரிசி குருணை - 2 கப்
மிளகு - 2 ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
முந்திரி பருப்பு - 50 கிராம்
நெய் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறிய துண்டு
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
பயித்தம்பருப்பு - 1 கப்
செய்முறை :
* ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* குதிரைவாலி அரிசியை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.
* பயித்தம்பருப்பை குழையாமல் வேகவைத்து கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், முந்திரி போட்டு வறுக்க வேண்டும்.
* அடுத்து இஞ்சி, பமிளகாய் போட்டு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் 3 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். ( 1 கப் குதிரைவாலி அரிசிக்கு 3 கப் வீதம் தண்ணீர் விடவேண்டும்.)
* கொதிவந்ததும் குதிரைவாலி அரிசி, உப்பு, பயித்தம் பருப்பை போட்டு கிளறவும்.
* வெந்து இறக்கும் பதம் வரும் போது கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு இறக்கி பரிமாறவும்.
* பொங்கல் சுவையில் இருக்கும் குதிரைவாலி மிளகு கிச்சடி அனைவருக்கும் பிடிக்கும்.