கம்பு மாவு - ஒரு கப்,
முளைவிட்ட பச்சைப்பயறு - அரை கப்,
துருவிய வெல்லம் - அரை கப்,
தேங்காய்த்துருவல் - அரை கப்,
நெய் - ஒரு தேக்கரண்டி.
வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய்விட்டு கம்பு மாவை வாசம் வரும் வரை வறுத்து, ஆறவிடவும்.
ஆறிய மாவில் வெதுவெதுப்பான நீர் தெளித்து, கட்டி இல்லாமல் பிசிறி கொள்ளவும்.
புட்டு அச்சில் கம்பு மாவு, முளைப்பயறு, வெல்லம், தேங்காய்த்துருவல் என்ற வகையில் அடுக்கி வைத்து 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுத்தால் சுவையான கம்பு - பச்சைப்பயறு புட்டு தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.