வடித்த சாதம் - ஒரு கப்,
கருப்பு எள் - 4 டீஸ்பூன்,
கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்,
உளுந்தம் பருப்பு - 2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,
காய்ந்த மிளகாய் - 4,
கறிவேப்பிலை - சிறிதளவு,
கடுகு - சிறிதளவு.
செய்முறை :
வெறும் வாணலியில் எள், கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தனித்தனியாக போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுத்து ஆற விடவும்.
நன்றாக ஆறியதும் இதனுடன் உப்பு சேர்த்து மிக்சியில் பவுடராக பொடித்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு போட்டு தாளித்த பின் அரைத்த பொடி, வடித்த சாதம் சேர்த்து கிளறி இறக்கவும்.
சூப்பரான சத்தான எள்ளோதரை ரெடி.