புதினா, பாலக்கீரை - தலா ஒரு கைப்பிடி அளவு,
இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
சாம்பார் வெங்காயம் - நான்கு,
காய்ந்த மிளகாய் - ஒன்று,
உளுந்தம்பருப்பு - 4 டீஸ்பூன்,
கடுகு - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
* புதினா, பாலக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.
* சாம்பார் வெங்காயதை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் புதினா, பாலக்கீரையை போட்டு வதக்கி தனியாக வைக்கவும்.
* அடுத்து உளுந்தம் பருப்பு, சின்ன வெங்காயம், இஞ்சி, காய்ந்த மிளகாயை போட்டு வறுத்துக் கொள்ளவும்.
* வறுத்த பொருட்களை நன்றாக ஆறவைத்து எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
* கடாயில் எண்ணெயில் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து பரிமாறவும்.
* இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட ஏற்ற சத்தான சட்னி இது. .