சமையல்

Cooking Tips| பயனுள்ள சமையல் டிப்ஸ் உங்களுக்காக...

எந்த ஒரு பொரியல் செய்யும்போதும் அதில் சிறிதளவு சீரகம் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

மாலை மலர்

* கேழ்வரகு, கம்பு, கோதுமை தோசை செய்யும்போது அதில் சிறிதளவு அரிசி மாவு கலந்தால் மொறுமொறுப்புடன் இருக்கும்.

* தேங்காய் சட்னி செய்யும் போது அதில் ஒன்று அல்லது இரண்டு பல் பூண்டு சேர்த்து அரைத்தால் சட்னி சுவையாக இருக்கும்.

* சப்பாத்தி மாவு பிசையும்போது அதில் சிறிது வெண்ணெய் அல்லது நெய் சேர்த்து பிசைந்தால் மிருதுவாக இருக்கும்.

* ரசகுல்லா அல்லது ரசமலாய் செய்யும்போது பால் உருண்டையை உள்ளங்கையில் வைத்து நன்கு தேய்த்து பிசைந்தால் மிருதுவாக இருக்கும்.

* எந்த ஒரு பொரியல் செய்யும்போதும் அதில் சிறிதளவு சீரகம் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

* எந்த காய்கறி வைத்து புளிக்குழம்பு செய்தாலும் அந்த காய்கறியை எண்ணெய்யில் நன்கு வதக்கிய பின்பு சேர்த்தால் காய்கறி மிகவும் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.

* தோசை மாவு இல்லாத சமயத்தில் மிக்சி ஜாரில், தேவைக்கேற்ப அரிசி மாவு, கோதுமாவு சேர்த்து நீர் கலந்து அரைத்து எடுத்தால் உடனடி மாவு தயார் இதனுடன் கேரட், வெங்காயம், தக்காளி, பன்னீர், பீட்ரூட் சேர்த்தால் விதவிதமான தோசை தயார்.