ஆரோக்கியம்

ஜீரண சக்தியை அதிகரிக்கும் இஞ்சி ரசம்

அஜீரண பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த இஞ்சி ரசத்தை செய்து சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். இதை சூப்பாகவும் பருகலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

மாலை மலர்

துவரம்பருப்பு - கால் கப்
பூண்டு - 5 பல்
மிளகு - 2 டீஸ்பூன்
இஞ்சி - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
சீரகம் - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
எலுமிச்சை சாறு - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
கடுகு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

துவரம் பருப்பை வேக வைத்து தண்ணீரை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பூண்டு, இஞ்சி, மிளகு ஆகியவற்றை மிக்சியில் அரைத்துக்கொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும்.

பின்னர் அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு, மிளகை போட்டு வதக்க வேண்டும்.

அதனுடன் பருப்பு வேக வைத்த தண்ணீர், மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்க வேண்டும்.

மசாலா தண்ணீர் கொதிக்க தொடங்கியதும் இறக்கி, அதனுடன் எலுமிச்சை சாறு, கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

சூப்பரான இஞ்சி ரசம் ரெடி.

இந்த ரசத்தை குடிக்கவும் செய்யலாம். சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம்.