நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் கண்ணை மூடி உங்கள் உடம்பில் இயங்கும் மூச்சோட்டத்தை அமைதியாக கவனியுங்கள். மூச்சு உள்ளே வருவது, மூச்சு வெளியே வருவது, இதனை மட்டும் கூர்ந்து கவனியுங்கள். இது தியானமாக மலரும். எண்ணங்கள் ஒடுங்கும். உங்கள் உணர்வு அன்னமய கோசத்தில் இருந்து, பிராணமய கோசம், பின் மனோன்மய கோசம், பின் புத்திமய கோசம் சென்று கடைசியில் ஆனந்தமய கோசமான உயிரில் லயித்து, அந்த உயிர் சக்தி உடல் முழுக்க பரவும்.
ஒவ்வொரு மனிதனும் தனக்குள் உள்ள உயிர் சக்தியை, ஆத்ம சக்தியை உணர வேண்டும். அதற்கு இந்த உடலுக்குரிய மருந்து யோகாசனம், முத்திரை, மூச்சுப்பயிற்சி உள்ளத்திற்குரிய மருந்து தியானம்.
இந்த பயிற்சி செய்தால் நாம் சிறப்பாக, ஆரோக்கியமாக, ஆத்மானந்தமாக வாழலாம். நிறைய மனிதர்கள் தன்னை உணராமல் தனது ஆத்மசக்தியை உணராமல் அவதிப்படுகின்றனர். ஒவ்வொருவரும் தனது சக்தியை உயிர்சக்தியை உணருங்கள்.
யோகக் கலைமாமணி
பி.கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)
63699 40440