ஆய்ந்த முருங்கைக் கீரை - ஒரு கப்,
வெங்காயம் - 1,
தக்காளி - ஒன்று,
பூண்டு - 5 பல்,
இஞ்சி - சிறிதளவு,
[பாட்டி மசாலா] மிளகுசீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
நெய் - ஒரு டீஸ்பூன்,
சோள மாவு - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
பூண்டை தட்டிக்கொள்ளவும்.
சோள மாவுடன் தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
வாணலியில் நெய் விட்டு தட்டிய பூண்டு, இஞ்சித் துருவல் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் கீரை சேர்த்து சுருள வதக்கவும்.
பிறகு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
கீரை வெந்ததும் அதில் கரைத்து வைத்துள்ள சோள மாவு கரைசல் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
கடைசியாக மேலே [பாட்டி மசாலா] மிளகு சீரகத்தூள் தூவி சூடாக பருகவும்.