நெல்லிக்கனி அமுதக்கனி என்று அழைக்கப்படுகிறது. அவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்டது. நெல்லிக்காய் சாப்பிடுவதற்கு மட்டுமல்ல, தலைக்கு, சருமத்துக்கு என நம்முடைய ஒட்டுமொத்த உடலுக்கும் ஆரோக்கியத்தையும் அழகையும் தருகிறது.
அத்தகைய நெல்லிக்காய் ஜூஸை வெயில் காலத்திலும் மதிய நேரங்களிலும் பொதுவாகக் குடிப்போம். ஆனால் நெல்லிக்காய் ஜூஸை அதிகாலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடியுங்கள். அப்படி குடிப்பதால் கீழ்வரும் ஏராளமான நன்மைகள் உண்டாகும்.
புரதங்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக்களின் அளவைக் குறைத்து, உடல் பருமன் உண்டாவதைத் தடுக்கிறது.
அதிலுள்ள கால்சியம் எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
அதிகப்படியான சூட்டைக் குறைத்து, உடலை எப்போதும் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.
நம் உடலில் உள்ள டாக்ஸின்கள் அனைத்தையும் முழுமையாக வெளியேற்றி, உடல் மற்றும் ரத்தத்தையும் சுத்தமாக்குகிறது.