சினிமா

படித்துக்கொண்டே நடிப்பேன், நடித்துக்கொண்டே படிப்பேன்: மாளவிகா நாயரின் கொள்கை

‘குக்கூ’ படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த மாளவிகா நாயர், சினிமாவில் நடித்தாலும் தொடர்ந்து படிப்பேன் என்று கூறியிருக்கிறார்.

மாலை மலர்

இந்நிலையில் தற்போது மீண்டும் தமிழ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ என்ற படத்தில் வீரா ஜோடியாக நடிக்கிறார்.

இப்படத்தை அவினாஷ் ஹரிகரன் இயக்குகிறார். மீண்டும் நடிக்க வந்திருப்பது பற்றி கூறிய மாளவிகா நாயர், “எங்கள் குடும்பத்தில் எல்லோரும் படித்து நல்ல உத்தியோகத்தில் இருக்கிறார்கள். எனக்கும் படிப்பில் ஆர்வம் அதிகம். நான் ஏற்கனவே நடித்த படங்கள் அனைத்தும் கோடை விடுமுறை நாளில் நடித்தவைதான்.

‘குக்கூ’ படம் நான் 10-வது வகுப்பு விடுமுறையின்போது நடித்தது. அடுத்து பிளஸ்-1, பிளஸ்-2 படிப்பு முக்கியமானது. எனவே, நடிப்புக்கு இடைவெளி விட்டு படிக்கச் சென்று விட்டேன். இப்போது பிளஸ்-2 எழுதி விட்டு ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறேன். கோடை விடுமுறை என்பதால் படத்தில் நடிக்கிறேன். இனி கல்லூரிக்கு குறிப்பிட்ட நாட்கள் சென்றால் போதும். அந்த நாட்கள் தவிர மற்ற நாட்களில் நடிப்பேன்” என்றார்.