இதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரகுமான், ‘இந்த சம்பவத்தால் நான் வேதனை அடைந்துள்ளேன். இதைப்போன்ற செயல்கள் இந்தியாவில் நடப்பதில்லை. இது என்னுடைய இந்தியா அல்ல, முற்போக்கான கருணையுள்ள இந்தியாவைதான் நான் காண விரும்புகிறேன்’ என குறிப்பிட்டார்.
உங்களுடைய வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை காணும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைக்குமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நான் இன்னும் இளமையாக இருக்கிறேன். எனது வாழ்க்கையப் பற்றிய படம் இப்போதைக்கு தேவை இல்லை. எனது மறைவுக்கு பிறகு யாராவது படம் தயாரிக்கட்டும் என அவர் தெரிவித்தார்.