அமீர் 
சினிமா

நீக்கிய காட்சிகளை சேர்த்ததால் மன உளைச்சலுக்கு ஆளான அமீர் பட இயக்குனர்

அமீரை வைத்து ஒரு படத்தை இயக்கி இருக்கும் பிரபல இயக்குனர், நீக்கிய காட்சிகளை சேர்த்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்.

மாலை மலர்

பின்னர் இயக்குனர் வி.இசட் துரையிடம் படத்தை இயக்கும் பொறுப்பை ஒப்படைத்தனர். அவர் கதையில் யாரும் தலையிடக்கூடாது என்று உறுதிமொழி பெற்று படத்துக்கு நாற்காலி என்று பெயர் வைத்தார். ஏற்கனவே எடுத்த காட்சிகள் சிலவற்றை பிளாஷ்பேக்காக வைத்து கதையில் மாற்றங்கள் செய்து படப்பிடிப்பை முடித்தார்.

ஆனால் துரை நீக்கிய காட்சிகளை மீண்டும் அவருக்கு தெரியாமல் படத்தில் சேர்த்து விட்டதாக சர்ச்சைக்கிளம்பியுள்ளது. இதனால் அதிருப்தியில் இருக்கிறார் துரை. இருட்டு வெற்றி படத்தை கொடுத்த துரைக்கு இந்த மனஉளைச்சல் தேவையா என்று திரை உலகினர் முணுமுணுக்கின்றனர்.