சிங்கமுத்து 
சினிமா

வெறுப்பு வராத அளவுக்கு நடிகைகள் ஆடைகளை அணிய வேண்டும் - சிங்கமுத்து

வெறுப்பு வராத அளவுக்கு நடிகைகள் ஆடைகளை அணிய வேண்டும் என்று நடிகர் சிங்கமுத்து சமீபத்தில் நடந்த விழாவில் வேண்டுகோள் விடுத்தார்.

மாலை மலர்

கலைத்துறை என்பது பொழுதுபோக்கு மட்டுமின்றி மக்களை சிந்திக்க வைப்பதற்கான ஒரு ஆயுதமாகும். சினிமாவில் நடிக்கிற நடிகைகள் பொதுமக்கள் வெறுப்பு வராத அளவுக்கு ஆடைகளை அணிந்து நடிக்க வேண்டும். அப்போது தான் நமது தமிழ் கலாசாரத்துக்கு ஏற்றதாகும். 

கொரோனாவுக்கு பயந்து மக்கள் சினிமா தியேட்டருக்கு செல்லாமல் இருந்துவிடாதீர்கள். முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி தியேட்டருக்கு சென்று சினிமா தொழிலை காப்பாற்றுங்கள்.

இவ்வாறு நடிகர் சிங்கமுத்து கூறினார்.