இதனை பார்த்து எரிச்சலடைந்த வருண் தவானின் ரசிகர்கள், அவரை கடுமையாக திட்டினர். இந்த கமெண்டுகளுக்கு பதில் அளித்த ஷ்ரத்தா, "நான் நேற்று ஆணாதிக்கம் குறித்த ஒரு கருத்தை கூறினேன், ஒரு நடிகர் திருமணம் செய்துகொள்வதால் வேலையில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று நான் சொன்னபோது இது உங்கள் அனைவருக்கும் தவறாக தெரிகிறது, ஆனால் ஒரு நடிகையை அவ்வாறு கூறும்போது அது ஏன் தவறாக தெரியவில்லை? நடிகைகளும் தங்கள் ரசிகர்கள் மீதான அன்பை வெளிப்படுத்துகின்றனர்’ என குறிப்பிட்டார்.
பொதுவாக நடிகைகள் திருமணம் செய்துகொள்ளும்போது அவர்கள் தொடர்ந்து நடிப்பார்களா? என்று கேள்வி எழுப்பப்படுகிறது. இதற்கு நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.